Saturday, February 14, 2015

நண்பர் பொன்மாறன்

நண்பர் பொன்மாறன் ஒட்டன்சத்திரம் பள்ளியில் என்னுடன் பணியாற்றிய தமிழாசிரியர். இன்றும் நல்ல தமிழில் மட்டுமே பேசுகின்ற ஒரே நண்பர். 1965  ல் நடை பெற்ற இந்தி எதிர்ப்பின்போது மொழிக்காகப்போராடிய நண்பர்கள் குழுவின் தலைவர். 

Friday, February 13, 2015

நண்பர் சித்தன்

நண்பர் சித்தன் ஒட்டன்சத்திரம் பள்ளியில் உடன் பணியாற்றிய நண்பர். 1960 களில் எனது முக்கிய நண்பர்களில் ஒருவர். இன்று பேசினேன். உடல் நல்ல நிலையில் இல்லையென்றார். மகன் பழனி கல்லூரியில் பணியாற்றுகிறார். மனைவி பாண்டியம்மாள் பாரம்பரியத்தமிழ்ப் பெண்ணாகக்  குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளுகிறார். 
28.02.2015 காலை 6 மணி 
இன்று சித்தனுடன் பேசினேன். இந்த சனி ஞாயிறுகளில் இங்கே வருவதாகச் சொல்லியிருந்தார். வேரொரு முக்கிய உறவினர் இறந்து விட்டதால் இங்கே வர இயலவில்லை எனத்தெரிவித்தார். 

சித்தன் வருகை: 
50 ஆண்டுகால நண்பர் சித்தன் அவர்களது துணைவியார் ஆவடை மற்றும் மகள் பூங்குழலி மருமகன் சரவணன் பேரன் அனகன் ஆகியோருடன் ஓடம் நிறுவனத்திற்கு வருகையளித்தபோது எடுத்த காணொளி நிழற்படங்கள் 

நண்பர் அருணாசலம்

                          நண்பர் அருணாசலம் நான் ஒட்டன்சத்திரம் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றியபோது பள்ளித் தலைமையாசிரியராக இருந்தவர். காலம்: 1964 - 1968. சாதி மத பேதமற்ற சமுதாயம் உருவாக வேண்டுமென்பதில் ஒத்த கருத்துள்ளவர்.
                          அடிக்கடி நாங்கள் அலைபேசியில் பேசிக்கொள்ளுகிறோம். எனது வேண்டுகோளிற்கேற்ப 4 நண்பர்களது அலைபேசி எண்கள் SMS வழி அனுப்பியுள்ளார். சென்னி சண்முகம் 9976638499, பொன்மாறன் 943419633,துரைராஜ் 9443167376, சித்தன் 9150149277
                           இவரது சொந்த ஊர் பெரியகுளம். இவரது அண்ணன் கணபதி ஒரு அச்சகம் வைத்திருந்தார். பலமுறை பெரியகுளம் சென்றிருக்கிறேன். அங்கே எனது அறை நண்பராக இருந்தவர் எம் எஸ் எஸ்.